நெவில் சில்வாவுக்கு பிணை
By Independent Writer
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நெவில் சில்வா இன்று (24) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மாத்தறை நீதவான் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, குறித்த வழக்கின் 9 ஆவது சந்தேகநபரான நெவில் சில்வா இன்று (24) நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி