வெளிநாடொன்றில் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறைத்தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ இன்சாப் (பி.டி.ஐ) கட்சி பிரதிநிதிகளில் ஒருவரான ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் நீதிமன்றமொன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, பாகிஸ்தான்- ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் நடந்த விசாரணையின் போது இன்று(30) வழங்கப்பட்டுள்ளது.
நாடளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் 2022 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட கான், தற்போது ஊழல் வழக்கில் மூன்றாண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் பெப்ரவரி (08) ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்