நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி ரணில்
Ranil Wickremesinghe
Sri Lanka
Singapore
By Abi
வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ரணில் இன்று (09.04.2026) வைத்திய சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட பாதுகாப்பு
வைத்திய சிகிச்சையின் பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது பூரண குணமடைந்து நாடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் ரணிலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் அவரை வரவேற்க வருகை தந்திருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |