வாக்குமூலம் அளிக்க சென்ற முன்னாள் எம்.பி கைது: வெளியான பின்னணி
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் நிகழ்நிலை மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று (18) வாக்குமூலம் அளிக்க வந்தபோது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக ஒருங்கிணைக்கப்பட்ட சொகுசு காரைப் பிரித்து மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் நிகழ்நிலை மோசடி புலனாய்வுப் பிரிவு, கடந்த 6 ஆம் திகதி அதிகாலையில் தொடர்புடைய காரின் மறைக்கப்பட்ட பல பாகங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நாளை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
