கவிழ்ந்தது பெய்ரு தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம்!
பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிரான்சுவா பெய்ரு தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்தமையானது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிரான்சுவா பெய்ரு அரசாங்கத்தின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
பிரான்ஸ் நாடாளுமன்றில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரான்சுவா பெய்ருக்கு எதிராக 364 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருந்தன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி
மேலும் 194 எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் பதவியை பிரான்சுவா பெய்ரு தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னதாக அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கூட தனக்கு எதிராக கூட்டணி சேர்ந்து கொண்டு செயல்படுவதாக, பிரதமர் பிரான்சுவா பெய்ரு விரக்தியுடன் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இதுவரை ஜனாதிபதி மக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் பதவி விலகியுள்ளனர்.
கடந்த டிசம்பரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த மைக்கேல் பார்னியரினை தொடரந்து ஆட்சிக்கு வந்த பெய்ரூ , ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த இப்போது பதவிவிலகி உள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரும் நாட்களில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
