பூகோள அரசியலில் துருப்புச்சீட்டாக தமிழினம்!!
பூகோள அரசியல் உருவெடுத்திருக்கும் சமகாலத்தில் பேரம்பேசும் சக்தியாக தமிழினம் உள்ளதென தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் கிருபாகரன் தெரிவிக்கிறார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், 'பிராந்திய வல்லரசுகள் தங்கள் நலன்சார்ந்து தமிழர்கள் மீது அக்கறை கொள்ளும் போது, இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் தமது நிரந்தர தீர்வை வெளிப்படையாக அவர்களிடம் கூற வேண்டும்' என கூறியுள்ளார்.
46 ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற சூழலில், புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் கூட்டத்தொடரை நோக்கிய தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த வருடம் இடம்பெறுகின்ற கூட்டத்தொடர் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால்..
பகுதி - 1
பகுதி - 2