இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான இஞ்சி இந்தியாவில் பறிமுதல்

Ginger Sri Lanka India Ramanathapuram
By Sathangani Jun 13, 2024 07:14 AM GMT
Report

இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான சமையல் இஞ்சி மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் ரூபா மதிப்பிலான 60 மூட்டை சமையல் இஞ்சி மூட்டைகள் இன்று (13) கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த இஞ்சி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவைத்தில் பாரிய தீ விபத்து: தமிழர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு

குவைத்தில் பாரிய தீ விபத்து: தமிழர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு

சட்டவிரோத கடத்தல் 

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இந்த கடற்கரையிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், பீடி இலை, சமையல் இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான இஞ்சி இந்தியாவில் பறிமுதல் | Ginger To Be Smuggled From India To Sri Lanka

இந்த நிலையில் இன்று அதிகாலை மரைக்காயர் பட்டினம் கடற்கரையிலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு சமையல் இஞ்சி கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் நேற்று இரவு (12) குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மீன் வைக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர்.

வங்கியில் இலட்சக் கணக்கில் மோசடி : கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

வங்கியில் இலட்சக் கணக்கில் மோசடி : கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

அப்போது மரைக்காயர் பட்டினம் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டின் பின்புறம் இருந்து 60 சாக்கு மூட்டைகளில் சுமார் 2 தொன் எடை உள்ள சமையல் இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான இஞ்சி இந்தியாவில் பறிமுதல் | Ginger To Be Smuggled From India To Sri Lanka

இதையடுத்து இஞ்சி மூட்டைகளை மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு எடுத்து வந்து குறித்த வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் சமையல் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தமை தெரியவந்துள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி இந்திய மதிப்பு சுமார் 3 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் வெளியாகும் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் : அரசு அதிரடி நடவடிக்கை

இணையத்தில் வெளியாகும் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் : அரசு அதிரடி நடவடிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025