சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு எதிரான அரசாங்கத்தின் கீழ்தர செயற்பாடு - சஜித் சுட்டிக்காட்டு
இலாபத்தில் இயங்கும் "டெலிகொம்" நிறுவனத்திற்கு எதிரான அரசாங்கத்தின் கீழ்தர செயற்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரு வருடங்களில் மாத்திரம் சிறிலங்கா டெலிகொம் நிறுவனம் முறையே 1,832 மில்லியன் ரூபா மற்றும் 657 மில்லியன் ரூபா என்றடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதோடு,குறித்த வருடங்களில் வரி செலுத்தியதன் பிற்பாடு முறையே 7,881 மில்லியன் ரூபாவையும், 12,161 மில்லியன் ரூபாவையும் சிறிலங்கா டெலிகொம் நிறுவனம் இலாபமாக ஈட்டியுள்ளது.
அவ்வாறே, சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தில் இருக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சேமிப்பது அரச துறை பொறுப்பின் கீழ் இருக்க வேண்டிய ஒரு பகுதியாகும்.
மறுசீரமைக்க முன்மொழிந்திருக்கும் அரசாங்கம்
இருந்தபோதிலும்,இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.
இதுபோன்ற இலாபம் ஈட்டும் நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வது சிக்கலாகவுள்ளது.
சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பது நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும் போலவே தேசிய பாதுகாப்பிற்கும் வலுவான அச்சுறுத்தலாக அமையும்.
இவ்விவகாரம் குறித்து நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(13) நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 6 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)