ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை தக்க வைத்துக்கொள்ளும் போராட்டத்தில் சிறிலங்கா!
Bandula Gunawardane
Sri Lanka
Government Of Sri Lanka
By Kalaimathy
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பாதுகாப்பதற்காக மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எதிர்காலத்தில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதை நிறுத்தாமல் பராமரிக்கும் வகையில், பல மனித உரிமைகள் அம்சங்களில் முன்னேற்றம் அடைய தேவையான பணிகளை சிறிலங்கா அரசு செய்து வருகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி