வட பகுதியில் சட்ட விரோத உள்ளூர் துப்பாக்கி உற்பத்தி - ஒருவர் கைது!
Sri Lanka Police
Kilinochchi
By pavan
கிளிநொச்சியில் சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி தருமபுர காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சந்தேகநபர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து மூன்று உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் அதன் பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
இதனையடுத்து சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி