சுற்றிவளைக்கப்பட்ட பாரிய சட்டவிரோத எரிபொருள் கிடங்கு!
Kegalle
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமான முறையில் ரகசியமாக நடத்தப்பட்டு வந்த எரிபொருள் கிடங்கை சுற்றி வளைத்த காவல்துறையினர் அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.
கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (18) பிற்பகல் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ரகாபொல, மாஹேன பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த சட்டவிரோத எரிபொருள் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொலங்கமுவ, தெல்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் எனறும் இவரிடமிருந்து 790 லீற்றர் டீசலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் வரகாபொல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்