கடுமையான விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்

Bandaranaike International Airport Sri Lanka India
By Shalini Balachandran Apr 03, 2024 12:08 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  நீண்ட நேர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் | India Rajiv Kandhi Issue People Come Srilanka


இரண்டாம் இணைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதலாம் இணைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்களென  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அவர்கள் சார்பில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பலத்த காற்று! இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

பலத்த காற்று! இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

சிறப்பு முகாம்

இதன்படி இன்று(03) முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் | India Rajiv Kandhi Issue People Come Srilanka

மேலும் அவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

அதேவேளை இலங்கை தமிழர்களான முருகன், ரொபர்ட் பயஸ், எஸ்.ஜெயக்குமார் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்ததையடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

25 ஆண்டுகளின் பின் தாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன : ரணில் தரப்பு ஆதங்கம்!

அரசியல் கட்சிகள் மாயையில் வாழ்கின்றன : ரணில் தரப்பு ஆதங்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016