இந்திய கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய போராட்டம்
இலங்கை (Sri Lanka) கடற்படையினால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி இந்திய (India) கடற்றொழிலாளர்களினால் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போராட்டம் நாளை (19) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (19) தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கம் சார்பில் மாலை நான்கு மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு தொடருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருந்தனர்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பில், ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மணோகரன் தலைமையில் கடற்றொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் எழுந்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, கூட்டத்தை விட்டு வெளியே வந்த கடற்றொழிலாளர்கள் திட்டமிட்டபடி நாளை (19) தொடருந்து மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 23 மணி நேரம் முன்
