நாமல் ராஜபக்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமல் ராஜபக்ச KRISH பரிவர்த்தனையில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
குறித்த குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகைகள்
இந்நிலையில், சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.
[LQ4L46 ]
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது.
நாமல் ராஜபக்சவால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 70 மில்லியன் ரூபா நிதிஇ ரக்பி விளையாட்டை ஊக்குவிக்கும் பெயரில் பெறப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதி நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
