உச்சம் தொடும் சிறிலங்காவின் பணவீக்கம்..! ஓகஸ்ட் மாத பணவீக்க விபரங்கள்
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின்படி, ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 70.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன், சிறிலங்காவில் ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 84.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அத்துடன், உணவு அல்லாத பொருட்களின் விலை 57.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் வகையைச் சேர்ந்த பணவீக்கமும் 32.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பணவீக்கமானது ஜூலை மாதத்தில் சிறிலங்காவின் 66.7 ஆக இருந்ததாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கியின் புதிய அறிக்கை
53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான உலக வங்கியின் புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலின்படி , 2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.