தமிழர்களின் பெருமை பேசும் ''தமிழ்ப்பண்பாடு'' - அனைத்துலக மாநாடு
உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் தமிழ்ப்பண்பாடு - அனைத்துலக மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி முதல் யூலை 6ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், நுவரெலியா கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
குறித்த விடயத்தினை இந்த மாநாட்டின் இணைப்பாளரும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர். க.பாஸ்கரன் தெரிவித்தார்.
தொடக்க விழா 30ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) கைலாசபதி கலையரங்கில் யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன் தலைமையில் நடைபெறும்.
பல நாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள்
சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து, நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ் மலேசியா சிங்கப்பூர், ரீயூனியன் தீவுகள், தென்ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
யூலை 2ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலக (District Secretariat Nuwara Eliya) ஆச்சரிய மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு தமிழ் பண்பாடு அனைத்துலக மாநாடு கொட்டகல ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ஜெகநாதன் சற்குருநாதன் தலைமையில் ஆரம்பமாகும்.
அனைத்துலக தமிழ் பண்பாட்டு மாநாடு கொழும்பு மயூரபதி ஸ்ரீபத்ரகாளி அம்மன் ஆலய (Mayurapathy Sri Bhadrakali Temple) பண்பாட்டு கலையரங்கில் யூலை 2ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





