பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணையில் முல்லைத்தீவின் ஊடகவியலாளர்

Mullaitivu Sri Lanka Journalists In Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 17, 2025 06:25 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் அழைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு முன்னலையாகியுள்ளார்.

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் காவல் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் அவர் இன்று (17) விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2025.08.07 அன்று ஊடகவியலாளர் குமணன் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் இன்றைய தினம் (17) அளம்பில் காவல் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சுமந்திரன் அழைப்பு விடுத்த கடையடைப்பு - தமிழரசின் பிரித்தானிய கிளை கடும் எதிர்ப்பு

சுமந்திரன் அழைப்பு விடுத்த கடையடைப்பு - தமிழரசின் பிரித்தானிய கிளை கடும் எதிர்ப்பு

வாக்குமூலம் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த ஊடகவியலாளர், “கடந்த வருடம் (2024.10.08) எனது முல்லைத்தீவில் உள்ள வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினர் நான் வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உரிமை பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாட்டவர்களின் அவதானத்தை பெறும் நோக்கோடு வேலை செய்வதாக தமக்கு ஒரு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வீட்டில் உள்ளவர்களிடம் பெற வேண்டும் என்று சென்றிருந்தார்கள் .

பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணையில் முல்லைத்தீவின் ஊடகவியலாளர் | Journalist Under Investigation Anti Terrorism Unit

அந்த நேரம் நான் யாழ்ப்பாணத்தில் நின்ற காரணத்தால் தொலைபேசி வழியாக என்னை தொடர்புகொண்ட அவர்கள் நான் நாட்டுக்கு வந்திருப்பதை அறியவில்லை எனவும் அதனால் தான் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வந்தோம் என தெரிவித்தனர்.

பதிலுக்கு நான் நாட்டுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன.

யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் : உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை

யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் : உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை

மேலதிக விபரங்கள்

நான் இங்கே தான் இருக்கிறேன் என் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் நேரடியாக என்னை அழைத்து விசாரியுங்கள் வீட்டுக்கு சென்று பெற்றோரை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறினேன்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணையில் முல்லைத்தீவின் ஊடகவியலாளர் | Journalist Under Investigation Anti Terrorism Unit

அதன் பின்னர் ஒருவாரத்துக்குள் என்னை விசாரணைக்கு அழைப்பதாக கூறிச் சென்றார்கள் ஆனால் பின்னர் அழைக்கவில்லை பத்து மாதங்களின் பின்னர் நேற்றுக் காலை என்னை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு எனது சமூகவலைத்தள பதிவுகள் தொடர்பில் ஒரு விசாரணையை ஆரம்பித்திருப்பதாகவும் அது தொடர்பில் வாக்குமூலம் பெற வேண்டும் எனவும் தெரிவித்ததோடு எனது சொந்த முகவரியான முல்லைத்தீவில் உள்ள வீட்டுக்கு சென்று அழைப்பாணை வழங்கியுள்ளனர்.

விசாரணைக்கு அழைத்தற்கான மேலதிக விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது.

இந்தியர்கள் இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை

இந்தியர்கள் இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை

கடுமையான கண்டணம்

அது தொடர்பில் அழைப்பாணையிலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இந்த CTID அழைப்பாணையை பெறுவது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.

எனது நாட்டில் நான் சுதந்திரமாக, அச்சமின்றி வாழவும், பணியாற்றவும் விரும்புகிறேன் ஆகவே இவ்வாறான ஒடுக்குமுறை கருவியான விசாரணைகள் நிறுத்தப்பட்டு அச்சமின்றி பணி செய்யும் சூழல் உறுதிப்படுத்தப்படவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணையில் முல்லைத்தீவின் ஊடகவியலாளர் | Journalist Under Investigation Anti Terrorism Unit

இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டணத்தை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் காவல் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் சட்டத்தரணிகளுடன் விசாரணைக்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியருக்கு எதிராக கடும் நடவடிக்கை - எச்சரிக்கும் பிரதி அமைச்சர்

அரசு ஊழியருக்கு எதிராக கடும் நடவடிக்கை - எச்சரிக்கும் பிரதி அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மயிலியதனை, வவுனிக்குளம், Scarborough, Canada, Vaughan, Canada

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025