தமிழ்நாட்டை உலுக்கிய விசசாராய விவகாரம்: உயரும் பலி எண்ணிக்கை
கள்ளக்குறிச்சியில் விசசாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா(India) தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விசசாராயம் அருந்தி உயிரிழந்த விடயமானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், கடந்த 18ஆம் திகதி விசசாராயத்தை அருந்திய பலர் உடல்நலம் மோசமாகி உயிரிழந்தனர்.
உயர்ந்த பலி எண்ணிக்கை
அதனை தொடர்ந்து இன்றுவரையில் சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 57 பேர் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.
மேலும், நேற்று முன்தினம் வரை 40 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)