இந்திய விமானப்படை - மலேஷிய விமானப்படை இணைந்து போர் பயிற்சி..!
இந்திய விமானப்படையும், மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் இணைந்து மலேஷியாவில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது இந்திய விமானப்படை மற்றும் மலேசிய விமானப்படை இணைந்து ஈடுபடும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும்.
நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
மேலும், இந்தப் பயிற்சி இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய விமானப்படையின் தகவல்
உதாரா சக்தி என்ற தலைப்பில் குறித்த பயிற்சி இடம்பெறுவதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
உதாரா சக்தி பயிற்சியில் இந்திய விமானப்படைப் படையின் ஒருபிரிவு, விமானப்படை விமான தளத்தில் இருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
உதாரா சக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
வான் பயிற்சியில் பங்கேற்கும் விமானங்கள்
இதேவேளை, இந்திய விமானப்படையின் எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள் இந்த வான் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
மற்றும், ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் என்ற விமானமும் வான் பயிற்சியில் பங்கேற்கிறது.
