இலங்கையில் தொடரப்போகும் பால் மா தட்டுப்பாடு!
இந்த மாத இறுதி வரையில் தொடரும் என இலங்கை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முற்பகுதியில் பால்மா ஏற்றிய கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாகவே, தாம், கடந்த 31 ஆம் திகதி முதல் பால்மா விலையை அதிகரிப்பதற்கு தாம், தீ்ர்மானித்தாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பால்மா பொதி ஆயிரத்து 345 ரூபாவுக்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.