மருந்துத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிலுவையில் இருக்கும் மருந்துகள் தொடர்பில் மாதாந்தம் அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் எனவும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி (Hansaka Wijemuni) அறிவுறுத்தியுள்ளார்.
இதனூடாக, மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் இந்த விடயம் தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, மாகாண வைத்தியசாலைகள் மாகாண அமைச்சிடமும், மத்திய அரசின் பொறுப்பிலுள்ள வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சிடமும் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம்
மருந்து விநியோகப் பிரிவுக்கு இந்த தரவுகள் மாதாந்தம் கிடைக்கும் போது, அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் அனேகமான பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பிலும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, தேவையான மாதிரிகள் பெறப்பட்டு தமது ஆய்வுகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர் பாரிய நோய்த்தொற்று தொடர்பான எந்த வித அச்சுறுத்தலும் நாட்டில் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |