பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Sumithiran May 29, 2024 11:10 PM GMT
Report

11 வயதான ஒரு பிள்ளையை மரமொன்றில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன் இரண்டரை வயது ஆண் பிள்ளையை தொங்கவிட்டு, அடித்து துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவ்விரு பிள்ளைகளின் தாயாரான 28 வயதுடைய பெண், செவ்வாய்க்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு(batticaloa) ஏறாவூர் காவல்துறை பிரிவில் உள்ள கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்ட இரு சிறுவர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூன்று திருமணம்

முதலாவதாக இந்து முறைப்படி திருமணம் முடித்த குறித்த பெண், கணவனை விட்டுவிட்டு அவருக்கு பிறந்த முதல் குழந்தையுடன் இஸ்லாம் மதத்துக்கு மாறி, முஸ்லிம் நபரொருவரை திருமணம் முடித்துள்ளார். அவ்விருவருக்கும் குழந்தைகள் இல்லை.

பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது | Mother Arrested For Torturing Children

இந்நிலையில், அவரையும் விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். அவ்விருவருக்கும் இரண்டரை வயதில் ஆண் பிள்ளை உள்ளது. அவரையும் விட்டுவிட்டு, தன்னுடைய இரு பிள்ளைகளுடன் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்துக்கு மீண்டும் வந்து அங்கு வாழ்ந்து வருகின்றார்.

டென்மார்க்கில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு : முகநூலில் பரவும் போலி விளம்பரம்

டென்மார்க்கில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு : முகநூலில் பரவும் போலி விளம்பரம்

 புகைத்தலில் ஈடுபட்டார் என தெரிவித்து

தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை, புகைத்தலில் ஈடுபட்டார் என தெரிவித்து அச்சிறுவனை பிடித்து மரமொன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். ஏப்ரல் மாதத்திலேயே இவ்வாறு சித்திரவதை செய்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

பிள்ளைகளை மரத்தில் தொங்கவிட்டு சித்திரவதை: தாய் கைது | Mother Arrested For Torturing Children

அதேவேளை, இரண்டாவது இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தந்தையான புத்தளத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது.

உலகில் அதிக முறை கைதானவர் மரணம்

உலகில் அதிக முறை கைதானவர் மரணம்

அதனையடுத்து உடனடியாக ஏறாவூருக்கு சென்று, தன்னுடைய மகனை தருமாறு அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். இதனையடுத்து அந்த தந்தை, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரணை செய்த காவல்துறையினர், அந்த தாயாரின் அலைபேசியை சோதித்துள்ளனர். அதில், அவ்விரு சிறுவர்களையும் தடியால் அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் எடுக்கப்பட்ட காணொளிகள் இருந்துள்ளன.

அதன்பின்னர், அப்பெண்ணை கைது செய்த காவல்துறையினர், அவ்விரு பிள்ளைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை, நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏறாவூர் காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025