கனடாவில் கொடூர கத்திகுத்து தாக்குதல் -தாய்,பிள்ளை உயிரிழப்பு
கனடாவில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் தாய் மற்றும் பிள்ளை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் எட்மோன்டன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொடூர கத்தி குத்து தாக்குதல்
[6XWOJL
க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் 11 வயது பிள்ளை மற்றும் தாய் மீது கொடூர கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 35 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் தீவிர விசாரணை
தாக்குதல்தாரிக்கும் உயிரிழந்தவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
