மாங்குளத்தில் மாபெரும் போராட்டம் : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (31.05.2025) மாங்குளத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வருகை தந்து ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு (Mullaitivu) ஊடக அமையத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
3007வது நாளாக தொடர் போராட்டம்
அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கடந்த 2017.03.08ம் திகதி முதல் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 31.05.2025 அன்று 3007வது நாளாக தொடர் போராட்டமாக அன்று காலை 9 மணிக்கு மாங்குளம் நகரில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
