தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Sri Lankan Tamils Mannar Mullivaikal Remembrance Day
By Vanan May 17, 2023 10:26 AM GMT
Report

கொடிகாமத்தில்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் கொடிகாமம் நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளைத் தலைவர் செல்வரத்தினம் மயூரன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், முச்சக்கரவண்டிச் சங்கத்தினர், தனியார் சிற்றூர்திச் சங்கத்தினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

இந்த நினைவேந்தலின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் பகிரப்பட்டது.

அம்பாறையில்

அம்பாறை மாவட்ட தமிழ் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், நாவிதன்வெளி பிரதேசபை முன்னாள் உறுப்பினர் தர்சினி, போராளிகள் குடும்ப உறவுகள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

இதன்போது மாவீரர் பெற்றோரினால் முள்ளிவாய்க்கால் நினைவுப் பொதுச் சுடரேற்றப்பட்டதுடன், வருகைதந்தோரினால் சுடர்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக நிகழ்வுகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் அவலங்களைக் காட்சிப்படுத்தும் பதாதைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இன்றைய இரண்டாவது நாளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

இதன் பொழுது பொதுமக்கள், வர்ததகர்கள், சாரதிகள் உட்பட அனைவருக்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது.

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், தமிழரசுக் கட்சியின் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அதேநேரம், மன்னார் தோட்டவெளி பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தோட்டவெளி பகுதி மக்களால் ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.

அருட்தந்தைகள், பொதுமக்கள் உட்பட பலரும் இணைந்து உணர்வு பூர்வமாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில்

தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் , முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்றைய தினம்(17) முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு | Mullivaikal 2023 Mullivaikal Kanchi

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, அடம்பன் பகுதியில் தமிழினப் படுகொலை அஞ்சலி நிகழ்வுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.

அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் தமிழினப் படுகொலை நினைவு நாள் மே -18 எனும் தொனிப்பொருளில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, வெள்ளைக்கொடி மற்றும் வெள்ளை நிற தோரணங்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் மற்றும் கஞ்சி வழங்கும் நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மெசிடே நிறுவன பணியாளர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016