மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
கிழக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சாந்தி வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று (18) அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவேந்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு ஒன்று திரண்ட மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட் மக்களுக்கு நீதிவேண்டும் எனகோரி வெள்ளை கொடிகள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
மனித உரிமை ஆணைக்குழு
இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்ட நினைவேந்தல் பகுதியில் ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரிடம் எட்டு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கையளித்துள்ளதுடன் அங்கிருந்த அனைத்து பொதுமக்களுக்கும் கஞ்சி பரிமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/b39ff9e8-f8bd-483d-bd80-b65b91af930d/24-664897252a643.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/02096b64-4131-4b69-be95-577141d97b69/24-66489725a1c67.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ad0c3e73-8312-467c-90de-cf2b20fd39b2/24-66489726143ab.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)