வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள்

United States of America North Korea Kim Jong Un
By Shadhu Shanker Nov 01, 2024 06:07 PM GMT
Report

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக கருதப்படும் ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா (North Korea)  நேற்று (31) சோதனை செய்துள்ளது.

இதன் மூலம், மொத்த உலக நாடுகளும் உறைந்துபோய் உள்ளன. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் (North Korea) இடையே கடும் மோதல் போக்கு உள்ள நிலையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது.

இதனால் அமெரிக்காவுக்கும் (USA), வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் தொடர்ந்து நிலவி வருகிறது.

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்த தீர்மானம்

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்த தீர்மானம்

பொருளாதார தடை

மேலும், வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்பட அதன் ஆதரவு நாடுகள் வடகொரியாவுடன் எந்த தொடர்பையும் தற்போது வரை வைத்திருக்கவில்லை.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile

இதனால் வடகொரியா அளவில் சிறிய நாடாக இருந்தாலும் கூட வல்லரசு நாடான அமெரிக்காவை தனது பரம எதிரியாக எதிர்த்து வருவதோடு அமெரிக்காவுக்கு தொடர்ந்து நேரடியாக வடகொரியா மிரட்டல் விடுத்து வருகிறது.

அமெரிக்காவை மிரட்டி பார்க்கும் வகையில் ஏவுகணை சோதனைகளையும் அவ்வப்போது வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு வடகொரியா எல்லையில் தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் தொடர்பான கூட்டு பயிற்சியை மேற்கொண்டது.

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு

 ஏவுகணை சோதனை

இதற்கிடையே தான் நேற்று வடகொரியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஹ்வாசாங் - 19 என்று பெயரிட்டுள்ள ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile

இந்த ஏவுகணை சோதனை தான் தற்போது அமெரிக்கா உள்பட மொத்த உலக நாடுகளையும் உறைய வைத்துள்ளது. ஏனென்றால் இந்த ஹ்வாசாங் - 19 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அளவில் மிகப்பெரியதாக உள்ளது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன. இந்த ஏவுகணைகள் 20 மீட்டர் நீளம் அதாவது 66 அடி நீளம் கொண்டதாகும்.

ஆனால் தற்போது வடகொரியாக சோதித்து பார்த்துள்ள ஹ்வாசாங் - 19 ஏவுகணை என்பது 28 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதாவது 92 அடி நீளம். மேலும் பொதுவாக ஏவுகணைகளில் திரவ வடிவில் தான் வெடிப்பொருட்கள் நிரப்பப்படும்.

ஆனால் தற்போதைய ஹ்வாசாங் 19 ஏவுகணையில் திட நிலையில் வெடிப்பொருட்களை நிரப்ப முடியும் என்பதோடு அதிக உயரத்தில், அதிக தூரம் சென்று தாக்கும் தன்மை கொண்டது.

உலக போரின் ஆரம்பம்: அடுத்த சுற்றுக்கு தயாரான ஈரான்

உலக போரின் ஆரம்பம்: அடுத்த சுற்றுக்கு தயாரான ஈரான்

ஜனாதிபதி கிம் ஜாங் உன்

அதோடு ரேடார் கண்காணிப்பில் இந்த ஏவுகணை சிக்காமல் நேரடியாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறனுடையதாக உள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஹ்வாசாங் - 19 ஏவுகணையில் எந்த வெடிப்பொருட்களும் நிரப்பப்படவில்லை.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile

இந்த ஏவுகணை கடலில் விழும்படியாக ஏவி சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனையை ஜப்பான் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென் நகாடனி கூறுகையில், ‛‛வடகொரியா ஏவி சோதனை செய்துள்ள ஏவுகணை என்பது முற்றிலும் புதிதானது. இந்த ஏவுகணை சோதனை 86 நிமிடங்கள் நடந்துள்ளது.

வானில் 7 ஆயிரம் கிலோமீட்டர் (4,350 மீட்டர்) தொலைவில் பறந்துள்ளது. இது வடகொரியாவின் முந்தைய ஏவுகணைகளை விட அதிக உயரத்தில் பறந்து சோதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையால் வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் மையப்பகுதியை கூட தாக்க முடியும்'' என கூறியுள்ளார். அதோடு வடகொரியாவின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளார்.

மேலும் இந்த ஏவுகணை சோதனை பற்றி வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இந்த ஏவுகணை பரிசோதனை என்பது எதிரிகளுக்கான எச்சரிக்கை தான்.

அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் அநுர!

அமெரிக்காவின் கழுகுப் பார்வையில் அநுர!

அமெரிக்காவில்  ஜனாதிபதி தேர்தல்

சமீபத்தில் எங்களின் பிராந்தியத்தில் வடகொரியாவுக்கு எதிராக செயல்கள் நடக்கின்றன. இதனால் எங்கள் நாட்டை அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் இந்த இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile

இதன்மூலம் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதோடு அமெரிக்காவில் நவம்பர் 5ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வேளையில் வடகொரியா இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.

இதனால் ஒருவேளை அமெரிக்கா - வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011