உணவு தொண்டையில் சிக்கி குழந்தை பலி
Sri Lanka Police Investigation
By Vanan
பொகவந்தலாவை பகுதியில் உணவு தொண்டையில் சிக்கி குழந்தையொன்று(வயது - 1½) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
26 வயதுடைய தாய் ஒருவர் தனது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போதே உணவு தொண்டையில் சிக்குண்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது.
பிரேத பரிசோதனை

பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (வயது - 1½) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் நீண்ட நாட்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொகவந்தலாவை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 16 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி