கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Banks
By Dilakshan Dec 18, 2024 06:28 PM GMT
Report

வங்கிக் கடனைப் பெற்று, அந்தக் கடனை மீளச் செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு அந்தக் கடன்களை மறுசீரமைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை இன்னும் மீளாத காரணத்தினால் பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தடை இம்மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது, பின்னர் மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர்

E-8 விசா ஊழல் விவகாரம்: களத்தில் இறங்கியுள்ள சி.ஐ.டியினர்

வங்கி முறைமை

இந்த நீட்டிப்பு மூலம், தனிப்பட்ட தொழில்முனைவோர் அவர்கள் வாங்கிய கடன்களின் அளவிற்கு ஏற்ப தங்கள் கடன்களை எவ்வாறு மறுசீரமைக்கலாம் என்பது குறித்து அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது.

பரேட் சட்டத்தின் விரிவாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 99% கடன் வாங்கியவர்கள் ரூ.25 மில்லியனுக்கும் குறைவான கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி | Opportunity Loan Defaulters To Restructure Loans

எவ்வாறாயினும், பரேட் சட்டம் முற்றாக இடைநிறுத்தப்பட்டால் வங்கி முறைமை வீழ்ச்சியடையக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான வட்டியை தவிர்த்து, நிலுவையில் உள்ள கடனை மறுசீரமைக்க டிசம்பர் 15, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பின் கீழ் கடனை செலுத்த தயாராக உள்ளதாக கடன் செலுத்துவோர் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் திகதிக்குள் வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதன்படி, வங்கியும் கடனாளிகளும் கலந்துரையாடி அவர்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கான திட்டம்

இதற்கிடையில், 25 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கடன் தொகையை வைத்திருப்பவர்கள், நிலுவையில் உள்ள வட்டியை தவிர்த்து, மார்ச் 31 க்கு முன்னர் தங்கள் கடன்களை மறுசீரமைக்க வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

கடன்களை செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட நற்செய்தி | Opportunity Loan Defaulters To Restructure Loans

இந்த வரம்பில் (25 முதல் 50 மில்லியன் வரை) கடனாளிகளுக்கு கடனை மறுசீரமைக்க செப்டம்பர் 15, 2025 வரை 9 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் அவர்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், கடன் மறுசீரமைப்புக்காக 2025 ஜூன் 15 வரை 6 மாதங்கள் கடன் தொகை 50 மில்லியன் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டியைத் தவிர்த்து, 1 சதவீதத்திற்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடன் மறுசீரமைப்புக்கான திட்டத்தை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் வங்கியிடம் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனக்கு எதிராக 19 வழக்குகள் - சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

தனக்கு எதிராக 19 வழக்குகள் - சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015