டயஸ்போராக்களுக்கு கிடைத்த வெற்றி..! பிரித்தானியாவில் நாமலின் உரை இரத்து
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஒக்ஸ்போர்டு யூனியனில் நடைபெறவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் நாமல் ராஜபக்சவின் பிரித்தானிய விஜயத்தின் போது, ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்வுகளை முன்னிட்டு நாமல் ராஜபக்ஷ, அவரது பாரியார் உட்பட மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் லண்டன் சென்றுள்ளனர்.
பாரிய போராட்டம்
இதற்கு லண்டனிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் 22 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடும் கண்டனத்தை வெளியிட்டு வந்தனர்.

அத்துடன், ஒக்ஸ்போர்டு யூனியனில் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரைக்கு எதிராகப் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட இருந்தது.
மாணவர்களின் போராட்டம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், பெப்ரவரி 27 அன்று கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெறவிருந்த நாமல் ராஜபக்சவின் உரை ரத்து செய்யப்பட்டது.
2009 போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு இத்தகைய கௌரவமான தளங்களை வழங்குவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு எனக் குறிப்பிட்டு இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |