நாடாளுமன்றில் இணைந்த புதிய உறுப்பினர்! (நேரலை)
இரண்டாம் இணைப்பு
இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மறைந்த அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்படப்ட வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், அவரின் பதவி வெற்றிடத்திற்கே பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரமவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னராக வர்த்தமானியில் வெளியிட்டது.
முதலாம் இணைப்பு
இன்று காலை 10.00 மணி முதல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகி நடைபெற்று வருகின்றது.
நேற்று முன்தின நாடாளுமன்ற அமர்வில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் முள்ளிவாய்க்காலில் உயிரழந்தவர்களுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடந்த நாட்களில் நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு நேரலையில்.....