வானளாவ உயர்ந்து நிற்கும் தாமரை கோபுரத்தின் அடிவாரத்தில் உள்ள மக்களின் நிலை
Colombo
SJB
Sri Lankan Peoples
By Sumithiran
எவரும் மகிழ்ச்சியடைய முடியாது
தாமரை கோபுரத்தைப் பார்த்து எவரும் மகிழ்ச்சியடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடு பெரும் பொருளாதாரப் படுகுழியில் வீழ்ந்துள்ள இவ்வேளையில், மக்கள் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கோபுரத்தை பாரத்து மகிழ்ச்சியடைய முடியாது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு கடன்
தொலைக்காட்சி உரையாடல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கி நிர்மாணிக்கப்பட்டதுதான் தாமரைக் கோபுரம்.
இதன் அடிவாரத்தில் உள்ள குடிசைகளில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த கடனை வரி வடிவில் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி