பிரதமர் செயலாளர் அலுவலகத்துடன் முத்துநகர் விவசாயிகள் கலந்துரையாடல்
முத்துநகர் விவசாயிகள் பிரதமர் செயலாளர் அலுவலகத்துடன் இணைந்து விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று(13.11.2025) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 குடும்பங்கள் தங்களது விவசாய நிலங்களை இழந்ததன் காரணமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெல் பயிரிடும் பணி
இதனால் இந்த பயிர்ச்செய்கை காலத்தில் நெல் பயிரிடும் பணிகளும் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் தொடர்பாக அரசாங்கத்துடன் பலமுறை கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இதுவரை தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் விவசாயிகளை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அதுவும் மேலும் தாமதமடைந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் அலுவலகம்
இதன்படி இன்று இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் அலுவலகம், இந்த பிரச்சினையில் தங்களது தலையீட்டினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், விவசாயிகள் அங்கு நிலவும் சிக்கலான சூழ்நிலையையும், சில அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வழங்கி விவசாய நிலங்களை அபகரிக்க முயல்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை அவர்கள் தீர்வுக்கான சில யோசனைகளையும் முன்வைத்தனர். இதன் விளைவாக, அடுத்த 10 நாட்களுக்குள் திருகோணமலையில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் மற்றொரு கலந்துரையாடலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |