மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்
மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் காவல் நிலையத்தில் கடமையாற்றிவரும் காவல்துறை அதிகாரி ஒருவரை பணியில் இருந்து இடை நீக்கம் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை(Polonnaruwa) காவல்துறையினருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டிலே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காவல்துறைஅதிகாரி 2021ம் ஆண்டு பொலன்னறுவை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த போது அங்கு காவல்துறையினருக்கு சன்மானமாக வழங்கும் பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ள நிலையில் இடமாற்றம் பெற்று ஏறாவூர் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
பணியிலிருந்து இடைநீக்கம்
இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக பொலன்னறுவை விசேட குற்றப் புலன்விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இவரை கடந்த 18 ம் திகதி கைது செய்து பொலன்னறுவை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.
இவ்வாறு பிணையில் வெளிவந்தவரை உடனடியாக பணியில் இருந்து காவல்துறை திணைக்களம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 3 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)