சடுதியாக வீழ்ச்சியடைந்த பிரித்தானிய பவுண்டின் பெறுமதி...! வீழ்ச்சியடையும் பொருளாதாரம்
பவுண்ட்
அமெரிக்க டொலருக்கு எதிராக பவுண்டின் பெறுமதி பாரிய சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1985ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு பவுண்டின் பெறுமதி பாரிய சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நேற்று புதன்கிழமை பிற்பகலில் ஸ்டெர்லிங் பவுண்ட் 0.64 வீதம் சரிந்து 1.145 டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை
பிரித்தானிய பொருளாதாரத்திற்கான பலவீனமான பார்வை மற்றும் வலுவான டொலர் ஆகியவை ஸ்டெர்லிங் பவுண்ட் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இங்கிலாந்து வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் போர் தொடர்ந்ததால் இந்த ஆண்டு பிரித்தானியா மந்தநிலையில் விழுவதைத் தடுக்க முடியாது என்றும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி எச்சரித்தார்.
ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்படும் தாக்கத்தால் இந்த நிலை பெருமளவில் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் 2023 இறுதி வரை பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று இங்கிலாந்து வங்கி எதிர்பார்க்கிறது.
அதிகரித்த எரிசக்தி கட்டணங்கள்
எரிசக்தி கட்டணங்களின் உயர்வைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத் திட்டத்திற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் வியாழன் அன்று விவரங்களை அறிவிக்க உள்ள நிலையில், வழக்கமான எரிசக்தி பட்டியல் சுமார் 2,500 பவுண்டாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, பொதுவாக ஒரு குடும்பத்தின் எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் அக்டோபரில் 1,971 பவுண்டில் இருந்து 3,549 பவுண்டாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS