பிரியந்த குமார படுகொலை விவகாரம் - 6 பேருக்கு மரண தண்டனை
murder
court
pakistan
priyantha kumara
By Vanan
இலங்கையரான பிரியந்த குமார தியவடன பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அடித்து, துன்புறுத்தப்பட்டு, தீக்கிரையாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பிலான காணொளிகளின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 100இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த 15 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி