கொழும்பில் பதற்றம்! பிக்குகள் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது!
புதிய இணைப்பு
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மருதானை டீன்ஸ் வீதியில் சோசலிச இளைஞர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது 02 பௌத்த பிக்குகள் மற்றும் 04 பெண்கள் உட்பட 84 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இருந்து டீன்ஸ் வீதியூடாக மருதானை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக சுகாதார அமைச்சுக்கு முன்பாக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை - டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சற்றுமுன் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருந்திரளான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.