நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்: பாதாள உலக ஆதிக்கம் முதல் நிர்வாகத் தோல்வி வரை!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கொடூர வன்முறை, சிறை அமைப்பிற்குள் பாதாள உலகக் குழுக்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
கைதிகள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் ஏற்பட்ட பாரிய உயிரிழப்புகள், சிறைச்சாலையின் உளவுத்துறைத் தோல்வியையும் ஆயுதக் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் உள்ள பலவீனத்தையுமே தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த நெரிசலான சூழல், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுப்பதோடு இவ்வாறான வன்முறைகள் வெடிப்பதற்கான உந்துசக்தியாகவும் அமைகிறது.
நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவப் பிரிவினரை அழைக்க வேண்டியிருந்தமை, சிறைச்சாலை நிர்வாகத்தின் தன்னிச்சையான அவசரகால நெருக்கடி மேலாண்மைத் திறனின்மையைக் காட்டுகிறது.
இவை குறித்து அரசியல், சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |