ட்ரம்பின் பரஸ்பர வரி தொடர்பில் ரணில் வெளியிட்ட அவசர அறிக்கை!!
அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையால் இந்த நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்ட மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் இந்த நிலைமையை ஒரு அவசர நிலையாக கருத வேண்டும் என்றும் புதிய அமெரிக்க வரிக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேலை இழப்பு
அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “கட்டணங்கள் அதிகரிக்கும் போது, பொருட்களை வாங்கும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைகிறது.அந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ள வேண்டும், அனை தவிர்க்க முடியாது.
அதன் விளைவு வேலை இழப்பு, இது ஒரு லட்சம் என்று கூறுகிறார்கள்.ஒரு லட்சமாக இருந்தாலும் அதற்குக் குறைவாக இருந்தாலும், அந்தத் தொகை அதிகரிக்கப்போகிறது.
தங்கும் வசதிகளை வழங்குபவர்கள், கடைகள் நடத்துபவர்கள், இது அனைவரின் வருமானத்தையும் பாதிக்கும்.
நமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது, நமது செலுத்தும் நிலுவைக்கு இன்னொரு சுமை வருகிறது. நாம் பெறும் பணத்தின் அளவு குறைந்து வருகிறது.
அவசரநிலை
எனவே, நாம் கடன் வாங்கும் அளவு அதிகரிக்கும். இந்த நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும், இலங்கைக்கு பல சிக்கல்கள் உள்ளன.
இதன்படி, அமெரிக்காவுடன் ஒன்றைப் பற்றி கலந்துரையாடுங்கள், அரசாங்கம் இதை ஒரு அவசரநிலையாகக் கருதி எடுக்கும் நடவடிக்கைகளை நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும்.
இல்லையெனில், இந்த நிலைமை குறித்து நாம் அறிக்கைகளை வெளியிடாவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சினைகள் எழும்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
