"விரைவில் ஆரம்பிக்கப்படும் ரணில் கோ கம"
மக்களால் தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக பதவி விலக முடியாது என்று கூறிய ஜனாதிபதி, கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்துவதற்கு எவ்வாறு முயற்சி செய்கின்றார் என முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ரணில் கோ கம’ விரைவில் ஸ்தாபிக்கப்படும்
மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பிரச்சினையை தீர்க்க முடியாது என வலியுறுத்திய ஜாகொட, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் கோட்ட கோ கம, பின்னர் மைனா கோ கம, இறுதியாக ஹொரு கோ கமவை ஸ்தாபித்தவர்கள் இறுதியில் ரணில் கோ கமவை ஸ்தாபிப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைக்கால ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை முன்வைத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து இடைக்கால அரசாங்கம் தேர்தலை நடத்துவது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மாநாட்டை உருவாக்குவதற்கான பிரேரணையை முன்வைத்ததாக ஜாகொட தெரிவித்துள்ளார்.
அரச தலைவரை இராஜினாமா செய்யும்படி கேட்டபோது, அவர் எப்போதும் மக்களால் பதவிக்கு வந்ததாகவும், அதனால் தான் பதவி விலக முடியாது என்றும் கூறினார்.
கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில்
தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் பிரதமராக்குகிறார். இந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

