காணாமல் போயுள்ள 16வயது பாடசாலை மாணவன்! விசாரணைகள் தீவிரம்
மாணவன்
கொட்டாவ பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலை மாணவனை கடந்த 7 நாட்களாக காணவில்லை என மாணவனது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவர் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு சிறுவர்களுடன் மஹல்வராவ பகுதியிலுள்ள தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
கண்காணிப்பு காணொளியில் சிக்கிய சிறுவன்
பின்னர் மீண்டும் கொட்டாவ நகருக்கு திரும்பி பேருந்தில் மாகும்புர பகுதிக்கு செல்லும் கண்காணிப்பு காணொளி கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனையடுத்து அவர் பேருந்தில் மீண்டும் கொட்டாவ திரும்பியுள்ளார் என்றும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இந்தநிலையில் குறித்த சிறுவனை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொட்டாவ காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
