மகாராணியின் இறுதிச் சடங்கில் ரணில் கலந்து கொண்டமை நாட்டுக்கு முக்கியமானது - வஜிர
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, கலந்து கொண்டது நாட்டுக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரச்சினைகள் இருந்தாலும் இவ்வாறு இறுதி சடங்கில் கலந்து கொண்டமை மிகவும் முக்கியம்வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, எலிசபெத் மகாராணிக்கு மகுடம் சூட்டும் அரச வைபவத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தாயும் தந்தையும் கலந்து கொண்டனர். இதனடிப்படையில் அவரது இறுதிச் சடங்கில் ரணில் கலந்து கொண்டமை இலங்கைக்கு மிகவும் முக்கியமானது.
இலங்கை எவ்வாறு செயற்படுகிறது
இலங்கைக்கு அரசர்களின் வரலாறு இருந்துள்ளது. எனினும் அந்த அரச பரம்பரைகள் அப்போதே முடிவுக்கு வந்து விட்டன. இப்போது இலங்கை முற்றிலும் ஜனநாயக நாடாக மாற்றம் பெற்றுள்ளது.
முன்னேறிய நாடுகளை நோக்கும் போது அந்நாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையாக செயற்படுகின்றன. ஆனால், இலங்கை எவ்வாறு செயற்படுகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.