சாணக்கியனை தரக்குறைவாக விமர்சித்த சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்

Parliament of Sri Lanka Ali Sabry Shanakiyan Rasamanickam
By Vanan Jun 08, 2023 04:16 PM GMT
Report

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை மறைமுகமாக நாய் என விமர்சித்த வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி, வெளிநாட்டிலுள்ள பிரிவினைவாத சக்திகளின் முகவராக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு வீடொன்றை வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடக செய்தியொன்றை மேற்கோள்காட்டி இரா.சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இன்று நாடாளுமன்றத்தில் பதில் அளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வெளிநாட்டு பிரிவினைவாத சக்தி

சாணக்கியனை தரக்குறைவாக விமர்சித்த சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் | Sanakyan Ali Sabri Parliament Criticize Speech

மேலும் பதில் வழங்கிய அவர், “வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகளுக்கு கூலிக்காக வேலை செய்யும் ஒருவர் இந்த நாடாளுமன்றத்திற்குள் இருக்கின்றார். இராசமாணிக்கம் என்ற குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டு மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மிகவும் விரும்பமற்ற ஒருவராக காணப்படுகின்றார்.

இந்தப் பிரச்சினை தீவிரமடைந்து சென்று, எப்போதும் அரசியல் செய்வதற்கே அவர் விரும்புகின்றார். யாரேனும் அதனை தீர்ப்பதற்கு முயற்சி செய்கின்ற போது, அதற்கு அவர் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுகின்றார்.

இனப் பிரச்சினை தீர்விற்காக பணிகளை நாம் மேற்கொள்ளும் போது எமது நற்பெயரை அழிப்பதற்கு அவரின் சர்வதேச முகவர்கள், பிரிவினைவாத சக்திகள் ஆலோசனை வழங்குகின்றனர். அவர் கூலிக்கு மாரடிக்கும் ஒருவர். அவர்களுக்காக அவர் குரல்கொடுகின்றார். நேற்றும் குரல்கொடுத்தார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு நான் வீடொன்றை கொடுத்ததாக அவர் கூறியதாக இன்று செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எனக்கு வீடொன்றை வழங்க முடியுமா? வீடு வழங்குவதற்கு நான் யார்? அரசியலை ஒரு தொழிலாக தெரிவுசெய்து நான் வந்தவன் அல்ல. நான் வரி செலுத்தி கட்டிய வீடு எனக்கு உள்ளது. அந்த வீட்டிலேயே நான் வாழ்கின்றேன். ஒருநாள் கூட அரச வீட்டில் வாழ்ந்ததில்லை.

சில வேளைகளில் வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் அதிகாரிகள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கான விருந்தோம்பல்களுக்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் பயன்படுத்திய வீட்டை மாத்திரமே நான் பயன்படுத்தியுள்ளேன்.

நான் வசித்த வீட்டை நான் யாருக்கும் வழங்கவில்லை. அதற்கான உரிமையும் எனக்கு இல்லை. நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி இவ்வாறு ஐந்து சதத்திற்கு பெறாத கதையை கூற முடியாது.

அனைத்து மனிதர்களுக்கும் கண்ணியம் ஒன்று உள்ளது. வேறு நாடுகளில் இருந்து இலங்கையை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரல் கொண்ட, பிரிவினைவாதத்தை புத்துயிர் பெற வைக்க முயலும் உங்களை இயங்குபவர்களிடம் இருந்தே உங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் அனைத்தையும் இழந்த மற்றுமொரு இலங்கை தலைமுறையை தவறாக வழிநடத்தும் வகையில் குறிப்பிட்ட ஒருவர் நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்துவது நியாயமானது அல்ல.

குரைக்கும் நாய்க்கு கல் எறிய மாட்டேன்

சாணக்கியனை தரக்குறைவாக விமர்சித்த சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் | Sanakyan Ali Sabri Parliament Criticize Speech

நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் அவர் போட்டியிட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை வகித்து, இந்த நாட்டில் அமைதியை கொண்டுவந்த கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்திருந்தார்.

அவரால் இந்தச் சபையை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நான் அதிருப்தி அடைகின்றேன். எனது தந்தையார் அப்போது வின்ஸ்ரன் சேர்ச்சிலை மேற்கோள்காட்டி, ஒரு விடயத்தை கூறுவார்.

இரண்டு பக்கமும் குரைக்கும் நாய்க்கு மீண்டும் மீண்டும் கல் எறியச் சென்றதால், ஒருபோதும் தமது பயணத்தை தொடர முடியாது என கூறுவார். இதற்கு பின்னர் குரைக்கும் நாய்க்கு நான் கல் எறிய செல்ல மாட்டேன். எனும் உண்மையான விடயத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பொய்களை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது.யார் அதற்கு அனுமதி வழங்கியது. எனக்கு அரச வீடொன்றை யாருக்கேனும் வழங்க முடியுமா? அந்த வீட்டை பெற்றுக்கொடுத்தவர்களிடம் கேட்க வேண்டும்.

இரா.சாணக்கியன் கூறிய கருத்து தொடர்பில் எனது முழுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றேன். எனினும் ஒன்றைக் கூற வேண்டும். எமது பயணத்தை நாம் தொடர்வோம்.

இந்த நாட்டு மக்கள் மத்தியில் அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய அனைத்து விடயங்களையும் நாம் செய்வோம்.

பிரிவினைவாத சக்திகளின் முகவர்களால் மேற்கொள்ளும் பொய்யான அவமதிப்புகளால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026