தனி அரச நிறுவனமாக மாறவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், அதற்குச் சொந்தமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக மாற்றப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
தனது x கணக்கில் பதிவொன்றை வெளியிட்டதன் மூலம் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், தேவையான முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதுடன், எரிபொருளின் தரம், திறன், திறன் ஆகியவற்றை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.
சம்பளக் கட்டமைப்பு
அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சம்பளக் கட்டமைப்பு என்பன மீளாய்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மற்றும் சேவைகளுக்காக டிஜிட்டல் தளங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு மற்றும் செயல்முறை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-md.webp)
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்… 6 நாட்கள் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)