புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும்

Grade 05 Scholarship examination Sonnalum Kuttram
By Jaso Dec 08, 2023 02:02 PM GMT
Report

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு ஒரு சிறிய உதவு தொகையை அரசு வழங்கும் செயற்திட்டமேயாகும்.

ஆனால் இப்போது அந்த புலமைப்பரிசில் பரீட்சையானது அரசாங்க உத்தியோகத்தர்கள் முதல் சாதாரண பாமரன் வரையான பெற்றோருக்கான போட்டிப்பரீட்சையாக மாற்றம் பெற்றுவிட்டதுதான் துரதிஷ்டம்.

அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள்

இதில் அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் பரீட்சையில் சித்தியடைந்தால் அவர்களுக்கு எதுவித கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.அப்படியென்றால் அந்தப்பிள்ளைகள் பரீட்சைக்கு தோற்றி என்ன பயன்?அரசாங்கம் இதற்காக ஒரு திட்டம் கொண்டு வந்தால் நல்லது. அது என்னவெனில் அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்தப்பரீட்சையில் தோற்றுவதற்கு தடை விதிப்பதாகும்.

புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும் | Scholarship Examination And Schools

சரி பெற்றோர்தான் போட்டி என்றால் இப்பொழுது பாடசாலைகளும் வலய மட்டத்தில் தாம் எத்தனையாவது இடம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன.

உண்மையில் இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கோ அல்லது பாடசாலைக்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை. அப்படியென்றால் அரசாங்கம் இதை ஏன் நடத்துகின்றது.

பாடசாலை கூடிய பெறுபேற்றை பெறவேண்டும் என

தமது பாடசாலை கூடிய பெறுபேற்றை பெறவேண்டும் என பாடசாலைகள் பிள்ளைகளுக்கு செய்யும் அநீதி இருக்கே அதைத்தான் தாங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும் | Scholarship Examination And Schools

இப்போது அடுத்தகட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிவிட்டன பாடசாலைகள்.

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்று அது.அங்கு ஆண்டு ஒன்றுமுதல் நான்காம் ஆண்டு வரை மூன்று வகுப்புக்கள் உள்ளன. ஆனால் அந்தப்பாடசாலையில் நான்காம் ஆண்டின் இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பிக்கும் ஆசிரியர் என தெரிவிக்கும் நபரிடம் கற்பதற்கு மூன்று பிரிவு மாணவர்களுக்கும் சேர்த்து பரீட்சை வைக்கப்படும் அதில் அவர்கள் நிர்ணயிக்கும் புள்ளிகளை பெறும் மாணவர்கள் தான் ஏ வகுப்பு என பிரிக்கப்பட்டு அந்த ஆசிரியரிடம் செல்வார்கள் மிகுதி மாணவர்கள் பி, சி என பிரிக்கப்பட்டு வேறு ஆசிரியர்கள் கற்பிப்பார்கள்.

80 மாணவர்களதும் எதிர்காலத்தை பாடசாலையே தீர்மானிக்கிறது

இதில் துயரம் என்வெனில் மூன்று வகுப்புக்களையும் சேர்த்து 120 பிள்ளைகள் இருந்தால் அந்த ஆசிரியரிடம் செல்லும் 40 மாணவர்களை தவிர மிகுதி 80 மாணவர்களதும் எதிர்காலத்தை பாடசாலையே தீர்மானிக்கிறது. அதாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் தொடர்ந்து ஏ வகுப்பில் கற்க மிகுதி 80 மாணவர்களும் தொடர்ந்தும் பி,சி வகுப்பிலேயே இருப்பார்கள். இது ஏன் என்றால் பாடசாலையின் பெறுபேற்றை கூட்டிக்காட்ட எடுக்கும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும்.

புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளும் | Scholarship Examination And Schools

இதற்கு வலயக்கல்விப்பணிமனைகளும் மறைமுகமாக துணைபோவதுதான் துயரத்திலும் மேல் துயரம்.

அனைத்து பிள்ளைகளும் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என்பதற்காகவே வெள்ளை சீருடையை அரசாங்கம் அறிமுகம் செய்தது.ஆனால் அந்த வெள்ளை சீருடைக்குள்ளும் கல்விமான்கள் புகுந்து தமதும் தமது பாடசாலையினதும் பெறுபேற்றை உயர்த்திக்காட்ட பிள்ளைகளை பலிக்கடாவாக்குவதுதான் வேதனையிலும் வேதனை்.

பிஞ்சு உள்ளங்களில் நச்சு விதையை பாடசாலைகளே விதிப்பது நியாயமா? இதற்கு கடிவாளம் இடுவது யார்?

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024