அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Shadhu Shanker Jul 23, 2024 12:10 AM GMT
Report

 'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டம்

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல் | Second Phase Aswesuma Program Scheduled Completed

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து மாவட்ட மட்டத்தில் அதிகளவான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கெடுப்புக்கான ஒவ்வொரு விண்ணப்பத்தின் தகவல் சேகரிப்பும் IWMS மென்பொருளின் ஊடாக சுட்டிக்காட்டினார்.

மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் கணக்கெடுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அலுவலர்கள் அந்தந்த வீடுகளுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்களின் தகவல்களைக் கண்காணித்து, தொலைபேசி செயலி மூலம் சமூகப் பாதுகாப்புத் தகவல் பதிவேட்டில் பதிவுசெய்வர் எனவும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கணக்கெடுப்பு நடவடிக்கையை கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கு கண்காணிப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜேரத்ன தெரிவித்தார்.

இலங்கையை வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி!

இலங்கையை வந்தடைந்த இந்திய கிரிக்கெட் அணி!

இரண்டாம் கட்டம்

அவர் மேலும் குறிப்பிடுகையில், கணக்கெடுப்பு அலுவலரால் தகவல் கட்டமைக்கப்பட்ட பின்னர், அனைத்து பிரதேச செயலாளர்களும் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியில் விண்ணப்பதாரர்களின் முழுமையான விவரங்களை கண்காணிக்க முடியும். கணக்கெடுப்பின் முடிவில், அந்தந்த குடும்பங்களின் தகவல்கள் தேர்வுக் குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல் | Second Phase Aswesuma Program Scheduled Completed

தேர்வுக் குழுக்கள் கணக்கெடுத்த, குடும்பத்தின் தகவலைக் கண்காணித்து, தெரிவு அளவுகோல்களின் கணக்கீட்டை அங்கீகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு, தெரிவு அளவுகோல்கள் கணக்கிடப்பட்ட பின்னர், வறுமையைக் கணக்கிடுவதற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும் இது கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை, சொத்துகள் வீட்டு நிலைமை மற்றும் குடும்ப புள்ளிவிவரங்கள் ஆகிய 06 பரிமாணங்களில் விஞ்ஞான ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் வறியவர்கள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ் 'அஸ்வெசும' நலன்புரி நலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழமைபோல் வழங்கும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.

அரசாங்கம் வழங்கிய தொகை

இந்த வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு சுமார் 34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 1,854,000 பேர் பயன்பெற தகுதி பெற்றுள்ளனர். அதற்காக அரசாங்கம் வழங்கிய தொகை 58.5 பில்லியன் ரூபா.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல் | Second Phase Aswesuma Program Scheduled Completed

மேலும், 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் களத் தகவல் சேகரிப்பை திறம்படச் செய்ய புகைப்படங்கள், புவி வரைபடங்கள், குரல் பதிவு போன்ற வசதிகளுடன் கூடிய புதிய தொலைபேசி செயலி (Mobile App) நலன்புரி நன்மைகள் சபை அறிமுகப்படுத்தியுள்ளது." என்றார்.

இந்த நலன்களுக்கு விண்ணப்பிக்கும் போது எப்போதும் மிகச்சரியான தகவல்களை வழங்குமாறும் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கேட்டுக்கொண்டார். நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர்களான கமல் பத்மசிறி, குமா துனுசிங்க மற்றும் பலர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

உர கொள்வனவுக்காக அரசாங்கம் செலுத்திய பாரிய நிலுவைத் தொகை

உர கொள்வனவுக்காக அரசாங்கம் செலுத்திய பாரிய நிலுவைத் தொகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026