ரணில் வழங்கிய பொறுப்பை அநுர நிறைவேற்றுவார் : வஜிர அபேவர்தன நம்பிக்கை

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Vajira Abeywardena sl presidential election
By Sathangani Sep 25, 2024 05:03 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மீட்டு தற்போது அந்த பொறுப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கையளித்திருக்கிறார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அந்த பொறுப்பை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட்ட ரணில் 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட மக்கள் வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு எமது கட்சி சார்ப்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ரணில் வழங்கிய பொறுப்பை அநுர நிறைவேற்றுவார் : வஜிர அபேவர்தன நம்பிக்கை | Sl People Have Faith In Anura S Election Manifesto

அதேபோன்று நாட்டில் 42 வீதத்துக்கும் அதிகமான மக்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு காட்டி இருக்கும் பொறுப்பை அல்லது அவரால் முன்வைக்கப்பட்டிருந்த தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களை செயற்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக சொல்லப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதை மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அல்லது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.

இதன்போது இலங்கையை ஸ்திரப்படுத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேவையான சூழலை ரணில் விக்ரமசிங்கவினாலே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. அதற்காக இலங்கை மக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் மாயம்: புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் மாயம்: புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்

மேலும் ரணில் விக்ரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கு முன்னெடுத்துச்சென்ற வேலைத்திட்டம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய சங்கங்களுக்கிடையில் இடம்பெறும் உலகில் நன்கொடை வழங்கும் குழுக்களுடன் கலந்துரையாடினார்.

ரணில் வழங்கிய பொறுப்பை அநுர நிறைவேற்றுவார் : வஜிர அபேவர்தன நம்பிக்கை | Sl People Have Faith In Anura S Election Manifesto

இதன்போது வங்குராேத்து அடைந்த நாட்டை, வங்குராேத்து நிலையில் இருந்து விடுவித்து, அவர் தயார் செய்துகொண்டு சென்ற வேலைத்திட்டங்களைவிட, இலங்கை மக்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

அப்படியானால் அந்த பொறுப்பை இலங்கை மக்கள் ஏற்றுக்காெண்டுள்ளனர். இலங்கை மக்கள் பொறுப்பெடுத்திருக்கும் அந்த பொறுப்பு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அதனால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஒன்று ஏற்படாமல் இருப்பதற்கு அந்த பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது.” என தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025