விமான நிலையத்தில் தங்க நகைகள் வைத்திருந்த பிக்கு: கடத்த முற்பட்ட நபர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் 2 அரைக்கோடி பெறுமதியான தங்க நகைகளை தனது பயணப் பையில் வைத்து வெளியே எடுத்து செல்ல முற்பட்ட பிக்குவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய, சிரிபுர பௌத்த மத்திய நிலையத்தைச் சேர்ந்த 58 வயதான பிக்குவே நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்கு, டோஹாவிலிருந்து கட்டார் விமான சேவையின் கியூ. ஆர்–654 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பிக்குவிடம் கொடுத்த நபர்
விமானப் பயணத்தில் நட்பு கொண்ட நபர் ஒருவர், இந்தத் தங்க நகைகளை விமான நிலையத்துக்கு வெளியே எடுத்து வந்து தரும்படி தம்மிடம் ஒப்படைத்ததாக பிக்கு சுங்கப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த தங்க நகைகளை பிக்குவிடம் கொடுத்த நபரையும் சுங்கப் பிரிவினர் தேடி கைது செய்துள்ளனர்.
இந்தத் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த சுங்கப் பிரிவினர் பிக்குவை விடுதலை செய்து தங்க நகைகளை பிக்குவிடம் கையளித்த நபருக்கு 5 லட்சம் ரூபா அபராதம் விதித்தனர்.