புகலிட கோரிக்கையை நிராகரித்த நாடு - மீண்டும் சிறிலங்காவிற்கு திரும்பும் கோட்டாபய!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, சிறிலங்கா திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து, நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபயவின் சார்பில் சிறிலங்கா அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக தாய்லாந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
கோட்டாபயவின் தாய்லாந்து விஜயம்
கோட்டாபய ராஜாகச இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜாக்சவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார்.
இந்நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாயவுக்கு சாதகமாக பதிலளிக்காத மத்திய கிழக்கு
கோட்டாபயவையும் மனைவியையும் ஏற்றிச் செல்ல சிறிலங்கா விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிங்கப்பூரிலிருந்து மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.