சிறிலங்காவிற்கு சர்வதேச ஆதரவு நிறுவனங்கள் விதித்துள்ள கடுமையான பரிந்துரை - மக்களுக்கு மேலும் வரிச்சுமை!
சிறிலங்கா அரசாங்கத்திற்கு தற்போது கிடைக்கும் ஒரு ஆண்டுக்கான நேரடி வரி வருவாயை அதிகரிக்க வேண்டும் என உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச ஆதரவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளன.
ஆகவே 2022 ஆம் ஆண்டில் அரசாங்க வருமானமாக கருதப்படும் 2056 பில்லியன் ரூபாவை 2023 ஆம் ஆண்டில் 3500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென அந்த ஆதரவு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன.
புதிய வரிகள்
அதற்கமைய அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
காணி வரி சொத்து வரி உள்ளிட்டவை
எனவே காணி வரி, சொத்து வரி உள்ளிட்ட 4 வரிகள் இதன் மூலம் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த வரிகளின் சதவீதங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஆனால் நவம்பர் மாதம் முதல் இந்த 4 வரிகளும் விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் பரிந்துரைகளுக்கமைய, புதிய வரிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.